ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Update: 2021-06-12 14:06 GMT

பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, தனது தொகுதிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இன்று நான்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினார்.

அத்துடன், கொரானா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கையுறைகள், ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் கருவி உட்பட கொரானா நோய் தடுப்பு உபகரணங்களையும், வேலுமணி வழங்கினார். நோய்த்தொற்று பாதித்து சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களுக்கும், உதவியாளர்களுக்கும்,  மருத்துவமனை வரும் பொதுமக்களுக்கும் மதிய உணவுகளை எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதை தொடர்ந்து, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்த காலை முதல் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்ததால் அவர்களுக்கு மதிய உணவுகளை வரவழைத்து, அனைவருக்கும் உணவுகளை வழங்கினார்.

சமீபத்தில் 25 ஆக்சிஜன் செருவூட்டி இயந்திரங்களை கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News