மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்ட வழக்கறிஞர் உடல்

ஞானபாரதி தான் இறந்து விட்டால், உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

Update: 2024-09-02 13:30 GMT

ஞானபாரதி

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசம்பந்தம் என்கிற ஞானபாரதி(76). கோவை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஞானபாரதி, உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞானபாரதி இன்று அதிகாலை உயிரிழந்தார். ஞானபாரதி தான் இறந்து விட்டால், உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் என தெரிவித்து இருந்தார். அவரது விருப்பபடி, அவரது உடல் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கபட்டது.

ஞானபாரதியின் உடலை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர். அப்போது வழகறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முழுக்கம் எழுப்பினா். ஞானபாரதி சிறந்த எழுத்தாளர், இடதுசாரி சிந்தனை கொண்டவர் எனவும் ஏழை எளியவர்களுக்காக கட்டணம் இன்றி வாதாடியவர் எனவும், வாழ்நாள் முழுவதும் சமூகத்திற்காக வாழ்ந்த அவர், இறந்த பின்னரும் தனது உடல் இந்த சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என நினைத்து அதையும் செயல்படுத்தி சென்று இருக்கின்றார் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பத்திரிகையாளராக இருந்த ஞானபாரதி சட்டம் படித்து வழக்கறிஞரானார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகி வாதாடியவர். அடிதட்டு ஏழை மக்கள், தொழிலாளர்களுக்காக வழக்குகளில் ஆஜராகி அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர். 

Tags:    

Similar News