கொரோனா சிகிச்சை மையத்தை திறந்த வைத்த உதயநிதி ஸ்டாலின்

நெகமம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 30 படுக்கை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-11 16:00 GMT

கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 30 படுக்கை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, கொரோனா மையத்தை பார்வையிட்டார்.

பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.

Tags:    

Similar News