நிரம்பி வழியும் ஆழியார் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-15 09:45 GMT

ஆழியார்அணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு முதல் ஆழியார் அணை நிரம்பி வழிந்து வருகிறது. இதையடுத்து இன்று 7 மதகுகளில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரிநீர் திறப்பால் ஆழியார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News