நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவன்: ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் வழங்கிய தன்னார்வலர்

தொடர் முயற்சியால் ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

Update: 2021-12-13 10:30 GMT

மாணவர் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். பழங்குடியினரான இவர் தந்தை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. தொடர் முயற்சியால் ராதாகிருஷ்ணன் மீண்டும் இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து கட்சி பிரமுகர்கள் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இதையடுத்து தொழில் அதிபர் டாக்டர் கோபி கிருஷ்ணன் சொந்த செலவில் நகராட்சி கமிஷனர் தானுமூர்த்தி, பொறியாளர் கிரிஸ் சன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ரூ10,000 மதிப்புள்ள ஆடைகள், வாட்ச் உள்ளிட்டவை வழங்கி மாணவன் ராதாகிருஷ்ணனுக்கு பொன்னடை போத்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News