அன்னபூர்ணா விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் : செல்வபெருந்தகை வலியுறுத்தல்

Coimbatore News- அன்னபூர்ணா விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-09-14 12:15 GMT

Coimbatore News- செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை

Coimbatore News, Coimbatore News Today- கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசும்போது, “ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி குறைதீர்க்கும் நாளில் நடந்து கொண்ட விதம், சிறு நடுத்தர தொழில் செய்து ஒரு ஹோட்டல் உரிமையாளர் தனது கோரிக்கையை வைத்ததற்காக தனது அறையில் அழைத்து அவரை மன்னித்து கேட்க வைப்பதும் அவரை நடத்திய விதமும் எல்லோரையும் கலங்கடிக்க செய்து உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க் கட்சியினரிடம் பொதுமக்களிடம், வணிகர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என குறைந்த பட்ச நாகரிகம் தெரியாமல், இல்லாமல் இவ்வாறு செய்து இருப்பது அனைவரையும் வருத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

மூன்று மேசைகளில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் இருப்பார்கள் அவர்களிடம் நிறைய குறைகள் இருந்தால் கூறுங்கள் என கூறியிருந்தார்கள். அது தான் அன்னபூர்ணா சீனிவாசன் குறைகளை கூறியிருக்கிறார்.சிறிய குழந்தைகள் கூட வாங்க, போங்க என அழைக்கும் பண்பு உள்ள மண். அனைவருக்கும் மரியாதை சொல்லிக் கொடுக்கும் மண் கோவை. இந்த மண்ணில் இப்படியே அநாகரீகமான செயல் நடந்து இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.இது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் என்பதற்காக அல்ல அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார தோரணையில் மிரட்டுவதும் மன்னிப்பு கேட்க வைப்பதும் அதை கேட்டதை பொது வெளியில் வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே நேரத்தில் நிதின்கட்கரி நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு கேலி இருக்கிறது. எவ்வளவு கிண்டல் இருக்கிறது. எவ்வளவு கண்டனக் குரல்கள் இருக்கிறது.

நிதின்கட்கரியிடம் கோவை சட்டமன்ற உறுப்பினரும் நிதியமைச்சரும் ஒரு ஹோட்டல் அறையில் அமர்ந்து கொண்டு, அவரை வரச் சொல்லுங்கள்,கூனி குறுகி சாய்ந்து உட்காராமல் நுனி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிதின்கட்கரி கேட்பாரா? அவர்களை கேட்க வைக்க முடியுமா? அதை வீடியோ அதை வீடியோ பதிவு செய்து பதிவு செய்து வெளியிடுவார்களா? அப்போது நிதின்கட்கரிக்கு ஒரு நியாயம், சீனிவாசனுக்கு ஒரு நியாயமா? நிதின் கட்கரி விமர்சனம் செய்ததை விட அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் விமர்சனம் செய்து விட்டாரா?இருக்கின்ற குறையை கூறியிருக்கிறார்.

நிதின் கட்கரி கேட்டதற்கும் அன்னபூர்ணா சீனிவாசன் கேட்டதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சீனிவாசன் பண்பாக மிகவும் நாகரீகத்தோடு கேட்டு உள்ளார். உள்ளூர்காரர்கள் இடையே இவர்கள் மன்னிக்க மாட்டேங்கிறார்கள். உள்ளூர் காரர்களையே கிண்டல் ஏளனம் மன்னிப்பு கேட்க வைப்பது. இதை திரைப்படங்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். திரைப்படத்தில் வில்லன்கள் படம் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு ஆவணமாக வெளியிடுவதைப் போல் தான் உள்ளது இது. அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கூடாது. அங்கு இருந்த நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசனும் கேட்கவில்லை. அண்ணாமலை தான் தேசத்திலே இல்லையே நாடு விட்டு நாடு கடந்து போயிருக்கிறார். நாம் தாயாக பார்ப்பவர்கள் பெண்கள். நமது வீட்டுப் பெண்கள் இவ்வாறு அவமானபடுத்துவதும் அசிங்கபடுத்துவதும் நமது வீட்டு பெண்கள் செய்வார்களா? இது அநாகரிகத்தின் உச்சம்” என்றார்.

Tags:    

Similar News