குண்டர் சட்டத்தில் கைது கஞ்சா வியாபாரி - ஆட்சியர் நடவடிக்கை

கோவையில், கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-20 14:15 GMT

ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்கிற குட்டி என்பவர் கைது செய்யப்ட்டார். இவர் மீது, ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கும் உள்ளது.

இந்நிலையில், கந்தசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கந்தசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, கந்தசாமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News