கோவையில் 175 பேருக்கு கொரோனா தொற்று - 3 பேர் பலி

கோவை மாவட்டத்தில் இன்று, 175 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-07-24 15:30 GMT

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் கோவையில், நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 624 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2154 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News