கோவையில் இன்று 698 பேருக்கு பெருந்தொற்று: 26 பேர் பலி

கோவை மாவட்டத்தில் இன்று 698 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 26 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-25 15:45 GMT

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 698 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 16 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 6721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று, கோவை மாவட்டத்தில்,  கொரோனா தொற்றில் இருந்து 1199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 7 ஆயிரத்து 791 பேராக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கோவையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் இன்று 26 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1994 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News