கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இன்று 188 பேருக்கு தொற்று

கோவையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவையில் இன்று 188 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

Update: 2021-07-29 16:15 GMT

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 188 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 28 ஆயிரத்து 874 உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 24 ஆயிரத்து 797 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2172 ஆக அதிகரித்துள்ளது. 

Tags:    

Similar News