கோவையில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது ; 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-09-19 13:45 GMT

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில் நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 215 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 217 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்து 726 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2317 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News