கோவையில் கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு

கோவையில் நேற்று ஒரே நாளில், 671 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-06-27 01:36 GMT

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 671 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 6122பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று கொரோனா தொற்றில் இருந்து 1263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 9 ஆயிரத்து 54 பேராக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று, கோவை மாவட்டத்தில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2003 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News