கோவையில் வெளுத்து வாங்கிய மழை - சாலையில் வெள்ளம் தேங்கி வாகன நெரிசல்

கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் உண்டானது.

Update: 2021-10-27 10:15 GMT

கோவை புறநகர் பகுதியில் பெய்த மழையால் தேங்கிய வெள்ளம்.

கோவை மாவட்டத்தில்,  புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று மதியம் மாநகர் பகுதிகளில் உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால் , பீளமேடு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோன்று புறநகர் பகுதிகளிலும் இரவில் இருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இதன்காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களீல் ஓரிரு இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், மழை பெய்துள்ளது. 

Tags:    

Similar News