கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-05-10 17:12 GMT
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை தனியார் பேருந்து 45 உக்கடத்தில் இருந்து வெள்ளமடை செல்கிறது இந்த நிலையில் நகரப்பேருந்து நிலையத்திற்குள் உள்ளே செல்லும்போது அரசு பேருந்து ,3h வழி விடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் வெங்கடேஷ் அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த கார்த்திக் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பஸ் ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தின‌ர் .

இதனால் பயணிகள் எங்கும் செல்ல முடியாமல் அவ‌தி அடைந்த‌ன‌ர். பொதும‌க்க‌ள் ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் என அனைவ‌ரும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர் .2 ம‌ணி நேர‌த்திற்கு மேலாக‌ ந‌டைபெற்ற‌ த‌ர்ணா போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு உட‌ன்பாடு ஏற்ப‌ட்டு க‌லைந்துசென்றன‌ர் .இச்ச‌ம்ப‌வ‌த்தால் காந்திபுர‌ம் பேருந்துநிலைய‌ம் ம‌ற்றும் சுற்றி உள்ள‌ சாலை என அனைத்து ப‌குதியிலும் பேக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப்ப‌ட்ட‌து.

Tags:    

Similar News