கோவையில் இன்று 130 பேருக்கு கொரோனா தொற்று ; 2 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று 130 பேருக்கு கொரோனா தொற்று ; 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-10-25 14:45 GMT

கோப்பு படம் 

கோவை மாவட்டத்தில்  இன்று 130 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 233 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2403 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News