கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழகம் வாழ்த்து

கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2022-07-03 03:48 GMT

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினர் கோவை மாநகர கூடுதல் ஆணையர் முருகவேலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கோவையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) முருகவேல்  பணி சிறக்க பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினர். இக்கழகத்தின் நிறுவனர் - தலைவர் பி கே.குமார் தலைமையில் பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் , காவல் உதவி ஆணையாளர் கே.ராமச்சந்திரன் (ஓய்வு),  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநிலத் தலைவி  லதாஅர்ஜுனன் ( சமூக ஆர்வலர் ),கோவை மாவட்ட செயலாளர் சுந்தரபாலன், செயற்குழு உறுப்பினர்செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News