கோவையில் புதிதாக 778 பேருக்கு கொரோனா தொற்று ; 4 பேர் உயிரிழப்பு

கோவையில், நேற்றைய தினத்தை விட இன்று 29 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-08 14:45 GMT

கோவையில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 29 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 778 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 24 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 11127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 2203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்து 761 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால், இன்று 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2593 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News