கோவையில் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட இன்று 854 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-19 15:30 GMT

கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 854 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரேநாளில்,  3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 3082 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 72 ஆயிரத்த 140 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 13728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 875 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார்.  கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2537ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News