கோவை மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

கோவை மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு புதியதாக கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-11-11 14:15 GMT
கோப்பு படம் 

கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை,  இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 369 பேராக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2433 ஆக உள்ளது.

Tags:    

Similar News