துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் கடத்தல் 8 பேர் கைது!

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து 9 கிலோ தங்கத்தை கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-22 04:09 GMT

பிடிபட்ட தங்க கட்டிகள்

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அந்த விமானத்தில் சென்னையை சோ்ந்த 8 போ் ஒரு குழுவாக வந்தனா்.அவா்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.உடைகளில் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராமல் அனைவரையும் தனி அறைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா். அவா்களின் உள்ளாடைகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் மடிப்புகளில் தங்க பேஸ்ட் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தனா். 8 பேரிடமிருந்தும் 9 கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி.இதையடுத்து 8 பேரையும் சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News