/* */

நோன்பில் இருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை என கைதிகள் போராட்டம்!

புழல் சிறையில் ரம்சான் நோன்பிலிருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனக்கூறி கைதிகள் போராட்டம்.

HIGHLIGHTS

நோன்பில் இருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை என கைதிகள் போராட்டம்!
X

புழல் சிறையில் ரம்சான் நோன்பிருந்த கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என கூறி சிறை காவலர்களை கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை கைதிகள் பிரிவில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய கைதிகள் ரம்சான் நோன்பிருந்தனர். மாலையில் நோன்பு திறக்கும் நேரத்தில் சிறை காவலர்கள் உணவை தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கைதிகள் ஆத்திரமடைந்து சிறை காவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சிறை அதிகாரிகள் கைதிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் காரணமாக புழல் சிறை வளாகத்தில் கைதிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே தமது கணவர் முகமது ரிப்பாஸை சிறை காவலர்கள் கண்ணன், சதீஷ், முரளி ஷூ காலால் தாக்கியதில் காயமடைந்ததாகவும், தமது கணவருக்கு உரிய சிகிச்சை அளித்திடவும், சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Updated On: 24 March 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...