ஊராட்சியில் முறைகேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

ஊராட்சியில் முறைகேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!
X
தாமரைப்பாக்கம் ஊராட்சியில் முறைகேடு உறுதியானதால் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன் செய்து ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

திருவள்ளூர் அருகே கணவரின் அதிகார துஷ்ப யோகம், ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடு செய்ததால் ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம், ஆட்சியர் அதிரடி,,,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக கீதா என்பவர் பதவி வகித்து வந்தார், இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தில் இவரது கணவர் துளசிராமனின் தலையீடு காரணமாக முறைகேடான ஆவண பரிமாற்றம், பஞ்சாயத்து நிதி கையாடல் போன்ற விதிகளுக்கு முரணான செயல்கள் அரங்கேரி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஊராட்சி மன்ற தலைவியின் அலுவலக இருக்கையை கணவர் துளசிராமன் ஆக்கிரமித்துக் கொண்டு அதிகார துஷ்ட யோகம் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்பு செய்ததாக கூறி ஊராட்சி மன்ற தலைவி கீதாவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார், கணவரின் அதிகார துஷ்ப யோகத்தால் ஊராட்சி மன்ற தலைவியின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?