/* */

பூந்தமல்லியில் 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.. கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு...

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பூந்தமல்லியில் 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.. கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு...
X

பூந்தமல்லியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், தமிழக்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

குத்தம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தேசிங்குராஜா தலைமை தாங்கினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளருமான கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் கந்தபாபு, அண்ணகுமார், கந்தன், குணாசேகர், சுகுமார், கருணாநிதி, பரணிதரன், பிரதிப், பிரவின் குமார், கவிஞர் ராஜேஷ், அருள் அசோக், சீதாபதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போல் கொரட்டூர் ஊராட்சி புதுசத்திரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியிலும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் குணசேகர், சுமதி விஜயகுமார், கோபிநாத், வார்டு உறுப்பினர்கள் ரம்யா, காமாட்சி கோவிந்தராஜ், செந்தில், டில்லிபாபு, ஆறுமுகம், கோவிந்தராஜ், கல்பனா தேவராஜ், ராஜேஷ், யமுனாதேவி பாரதிராஜா , சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து கூடப்பாக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கி பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் சேட்டு, சுப்பிரமணி சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 15 Jan 2023 4:31 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  3. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  5. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  7. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  8. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  9. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  10. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்