/* */

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை, அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை, அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
X

பூந்தமல்லியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.

பூந்தமல்லியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற. நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேட்டி அளித்த போது கூறியதாவது :-

நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடும் பணி இன்று முறையாக தொடங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் படி குழந்தைகளுக்கு 3 தவனையாக இந்த தடுப்பூசி போடப்படும். ஒவ்வொடு குழந்தைக்கும் ரூ. 12 ஆயிரம் செலவில் 9.23 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்திய அளவில் ஆண்டு தோறும் 12 லட்சம் குழந்தைகள் இந்த நோயினாஇறக்கிறார்கள். தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்து பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கு மாணவர்கள் தாயாராவது தவறானது அல்ல. நீட் தேர்வில் விலக்கு பெற்று தருவது திமுகவின் பிராதான கொள்கை .

இதற்காக முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்த போது வலியுருத்தினார். ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு கேட்டு போராடி வருகிறது.

நீதியரசர் எ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து அறிக்கை தயாரிக்க 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்கள் கருத்துக்கு விரோதமாக பாஜக துணைத் தலைவர் வழக்கு போட்டுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு வந்துவிட்டால் மாணவர்கள் பாதிக்கபட கூடாது என்பதற்காக பயிற்சி மையம் செயல்படும். மாணவர்களுக்கு பக்க பலமாக தமிழக அரசு இருக்கும்.

நீட் தேர்வு சட்டப் போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீட் தேர்வு வந்துவிட்டால் மாணவர்களுக்கும் , பெற்றோருக்கும் அது சங்கடமாக அமைந்து விடும். அதனால் மாணவர்கள் நீட்தேர்விற்கு படித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 13 July 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி