/* */

அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா பரவும் அபாயம்.

வடமதுரையில் அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

HIGHLIGHTS

அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா  பரவும் அபாயம்.
X

சமூக இடைவெளியின்றி நடக்கும் வாரசந்தை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபம் அருகே, அனுமதியின்றி வாரந்தோறும் காய்கறிச் சந்தை நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த வாரமும் வாரச்சந்தை வழக்கம்போல் நடைபெற்றது. இந்த அனுமதி இல்லாத வாரச்சந்தையில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் சமூக இடைவெளி, முக கவசம் போன்ற தமிழக அரசின் சட்ட விதிமுறைகள் அனைத்தும் கேள்விக்குறியாக மாறியதால் நோய்த்தொற்றும் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 April 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்