/* */

வீடு புகுந்து செல்போன் திருடியவருக்கு சரமாரி அடி உதை

திருமுல்லைவாயில் பகுதியில் வீடு புகுந்து செல்போன் திருடிய நபருக்கு சரமாரி அடி உதை.

HIGHLIGHTS

வீடு புகுந்து செல்போன் திருடியவருக்கு சரமாரி அடி உதை
X

ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் மூர்த்தி நகர், நாகாதம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் கதவை சாத்திவிட்டு தூங்கியுள்ளனர்.

இரவில் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் மேஜையின் மீது சார்ஜ் போட்டு வைத்திருந்த மூன்று செல்போனை எடுத்துக்கொண்டு ஓடுவதை பார்த்த சுரேஷ், திருடன் என்று கூச்சலிடவே, அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை பிடித்து, சரமாரியாக அடித்து, உதை கொடுத்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.

எஸ்.ஐ. உதயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையின் போது அந்த நபர் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா கிராமத்தை சேர்ந்த ஜெமினி என்பதும், அதே பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் பணியாற்றியதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் இருந்த மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து ஜெமினியை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 April 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்