வீடு புகுந்து செல்போன் திருடியவருக்கு சரமாரி அடி உதை
திருமுல்லைவாயில் பகுதியில் வீடு புகுந்து செல்போன் திருடிய நபருக்கு சரமாரி அடி உதை.
HIGHLIGHTS
ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் மூர்த்தி நகர், நாகாதம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் கதவை சாத்திவிட்டு தூங்கியுள்ளனர்.
இரவில் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் மேஜையின் மீது சார்ஜ் போட்டு வைத்திருந்த மூன்று செல்போனை எடுத்துக்கொண்டு ஓடுவதை பார்த்த சுரேஷ், திருடன் என்று கூச்சலிடவே, அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை பிடித்து, சரமாரியாக அடித்து, உதை கொடுத்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
எஸ்.ஐ. உதயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையின் போது அந்த நபர் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா கிராமத்தை சேர்ந்த ஜெமினி என்பதும், அதே பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் பணியாற்றியதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் இருந்த மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து ஜெமினியை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.