/* */

ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு

ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்கும்போது விரைவு ரயில் மோதி தூய்மை பணி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சே காடு, நாகராஜன் நகர் தெருவில் வசித்து வருபவர் ஆதி ஹரிஷ்,(24). இவர் ஆவடி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் நேற்று வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டார்.

இந்த நிலையில், பட்டாபிராம் இந்து கல்லூரி அருகே ரயில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில் ஆதி ஹரிஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆதி ஹரிஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Updated On: 4 April 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...