T23 புலி இப்போது எப்படி இருக்கு? உதகையில் வனத்துறை அமைச்சர் விளக்கம்

T23 புலி இப்போது எப்படி இருக்கு? உதகையில் வனத்துறை அமைச்சர் விளக்கம்
X
மைசூர் வன விலங்கு மறுவாழ்வுமையத்தில்உள்ள T23 புலியின்உடல்நிலை நன்றாக உள்ளதாக, வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்து கொண்டார். பின்னர் இலவச மின்சாரத்திட்டத்திற்காக 9 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி மாவட்டத்தில் ஆழ்த்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிணறு தோண்ட எந்த தடையும் இல்லை. மைசூர் வன விலங்கு மறு வாழ்வு மையத்தில் உள்ள T23 புலியின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. காயங்கள் குணமடைந்து வருகிறது.

தற்போது, அந்த மையத்தில் உள்ள சிறிய வன பகுதியில் ஆட்கொல்லி புலி விடபட்டுள்ளது. முழுவதும் குணமடைந்த பின்னர் தேசிய புலிகள் ஆணையத்தின் ஆணைப்படி பரிசீலிக்கபட்டு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வருவதா? அல்லது மைசூரிலேயே வைத்து பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யபடும் என்றார்.

Tags

Next Story
Similar Posts
சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
தார்ச்சாலை இல்லாத எள்ளீஸ்பேட்டை
திருச்செங்கோட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
உதகை மலைநகரில் எதிரொலித்த எதிர்ப்பு: சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி!
முதுமலை மக்களுக்கு மாற்றிடம் வழங்கியதில் முறைகேடு : பழங்குடியின மக்கள் புகார்..!
நீலகிரி வருவதற்கான இ பாஸ் முறையை ரத்து செய்ய  எம்.பி-யிடம் மனு...!
தெலுங்கில் மாஸ் ஹீரோவுடன் இணையும் சுந்தர் சி! வேற லெவல் கதையாம்..!
இத இத இதத்தான் எதிர்பார்த்தோம்..! ஆதிக்கை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்...!
உதகை படகு சவாரிக்கு கூடுதல் கட்டணம் : சும்மா கிடக்கும்  புதிய மின்சார படகுகள்..!
ஊட்டி வானில் தெரிந்த  80,000 ஆண்டு பழமையான வால்நட்சத்திரம்..!
ஊட்டி படுகர் சங்கக் கூட்டம்:  அமைச்சர் பதவி பறிப்புக்கு கண்டனம்..!
ai in future agriculture