/* */

12 மாவட்ட காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் மனு

சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் மனு அளித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

12 மாவட்ட காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் மனு
X

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பி வருவதை கண்டித்து நடவடிக்கை கோரி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 12 மாவட்டங்களில் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இரண்டாம் அலையில் தொற்று அதிகமாகி நோய் தொற்று காரணமாக அதிகமாக பலியாகின்றனர். மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசின் இந்த அவல நிலையை திசைதிருப்பும் வகையில் முன்னாள் முதலமைச்சர் மீது அவதூறு பிரச்சாரத்தை வலைத்தளங்களில் செய்து வருகின்றனர்.

கடந்த 22ஆம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் வந்த தகவல் என ஒரு தகவல் வலைதளங்களில் வந்தது. அதில் முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை என்ற தலைப்பில் நாங்கள் தாயில்லா பிள்ளைகள் எங்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என்று வெளிவந்துள்ளது.

வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி ஒரு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கழக ரீதியில் உள்ள சேலம், நாமக்கல் ,கரூர், மதுரை மாநகர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நிர்வாகிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

மதுரையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மணிகண்டன் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திலும் ,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கௌரிசங்கர் மேலூர் காவல் நிலையத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர் என்று கூறினார்.

Updated On: 23 May 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு