/* */

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது

காய்கறி வாகனத்தில் 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட யஸ்வந்த் மற்றும் சோம் சேகர்.

ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது வாகனத்தில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே ஹான்ஸ், குட்கா போன்ற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தில் வந்த மைசூர் பகுதியைச் சேர்ந்த யஸ்வந்த் மற்றும் நரசிபுரா பகுதியைச் சேர்ந்த சோம் சேகர் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 11 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...