சூலூரில் 200 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் ; 3 பேர் கைது

சூலூரில் 200 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் ; 3 பேர் கைது

Coimbatore News- புகையிலை பொருட்கள் பறிமுதல்

Coimbatore News- சூலூரில் ஒரு இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சூலூர் போட் ஹவுஸ் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சூலூர் காவல் நிலைய காவ‌ல் துறை‌யின‌ர் சம்பவம் இடமான சூலூர் போட் ஹவுஸ் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கெலாராம் (26), நாக ராம் (24), மற்றும் செட்டிபாளையம் பகுதியில் சேர்ந்த மணிகண்ட பூபதி (39) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 44 நபர்கள் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 506.610 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story