பொள்ளாச்சியில் 60 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் ; இருவர் கைது

பொள்ளாச்சியில் 60 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் ; இருவர் கைது

Coimbatore News- கைது செய்யப்பட்டவர்கள்

Coimbatore News- பொள்ளாச்சியில் 60 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர் நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது நான்கு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சப்பானிமுத்து (30) மற்றும் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த வர்கீஸ் ராஜ் (36) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 60 கிலோ 400 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின்பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 130 நபர்கள் மீது 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்களிடமிருந்து சுமார் 3394.96 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story