/* */

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் உயிரிழப்பு ; மனைவி படுகாயம்

100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் உயிரிழப்பு ; மனைவி படுகாயம்
X

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மஞ்சுளா

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் மற்றும் மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர்.

இன்று காலை திருமண நிகழ்வுகள் முடிவடைந்ததை அடுத்து கணேஷும், மஞ்சுளாவும் தங்களுக்கு சொந்தமான பொலீரோ காரில் நஞ்சநாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.நீலகிரி மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அருகில் இருந்த 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கார் பள்ளத்தில் பாய்வதை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், இது தொடர்பாக போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் இருந்த கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காரில் படுகாயங்களுடன் சிக்கித் தவித்த மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நீலகிரி மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Feb 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்