/* */

வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்

HIGHLIGHTS

வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம்  தாலிச்சங்கிலி பறிப்பு
X

கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கில் பறித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன்(70.) இவர் சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மல்லிகா( 63 ). இவர் நேற்று காலை 7 மணியளவில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சர்மா நகர் முதல் மெயின் ரோடு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். மல்லிகா கூச்சலிட்டதால் அருகிலிருந்தோர் ஓடிவந்து மல்லிகாவை மீட்டு எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...