அனைவரும் பசியாற வேண்டும் : உத்தரவிட்ட சிவபெருமான்..!

அனைவரும் பசியாற வேண்டும் :  உத்தரவிட்ட சிவபெருமான்..!
X
அனைவரையும் பசியாற்றிய பின்னரே தினமும் கோயில் நடை சாத்த வேண்டும் என சிவபெருமான் உத்தரவிட்ட கோயில் பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொருமுறை நடை சாத்தும்போதும் பகலிலும் , இரவிலும் கோயில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்கிறார்.

அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும். இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோயில் தான் அது. வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் இந்த கோயில் திகழ்கிறது.

வியாக்ரபாதர் முனிவர் இங்கு பூஜை செய்து, இறைவன் கார்த்திகை - அஷ்டமியன்று காட்சி கொடுத்தார் . இறைவன் காட்சி கொடுத்த திதி இன்றும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றுமட்டும் சூரிய ஒளி சிவலிங்க திருமேனி மீது மாலையாக படும்.

இந்தக் கோயில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

இடம் : வைக்கம் ( கோட்டயம் , கேரளா )

இறைவன் : வைக்கத்தப்பன், வியாக்ரபுரீஸ்வரர்

Tags

Next Story
Similar Posts
சேலம் விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி..!
ஆலயத்தை அகற்றுவதாக பதிவால் போலீஸ் குவிப்பு..!
குடிநீர் பணிக்கு அடிக்கல்..!
ரூ.150 வழங்கி ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது..!
மும்மொழி கொள்கையால் தமிழ் காணாமல் போகாது..!
ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட தி.மு.க., செயற்குழுவில் முடிவு..!
காவல் உதவி செயலி போலீசார் விழிப்புணர்வு..!
நாமக்கல்லில் புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கம்..!
மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி..!
நாமக்கல்லில் போதை பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணி..!
விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம்..!
பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி..!
நசியனூரில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்..!
ai in future agriculture