ரூ.150 வழங்கி ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது..!

ரூ.150 வழங்கி ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது..!
X
ரூ.150 வழங்கி ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்

சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த பக்கநாடு, மேட்டுத்தெ-ருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. இவரது வாட்ஸாப் எண்ணுக்கு கடந்த டிசம்பரில் 3 பேர் அடுத்தடுத்து தொடர்பு கொண்டு பேசினர்.

கூகுள் மேப் மூலம் மதிப்பீடு செய்தால் பரிசுத்தொகை பெறலாம்

அப்போது அவர்கள் சில குறிப்பிட்ட ஓட்டல் பெயர்களை கூறி, அதை 'கூகுள் மேப்' மூலம் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கி அதை, 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து அனுப்பினால் பரிசுத்தொகை பெறலாம் என கூறி, 'லிங்க்' அனுப்பினர். அதன்படி சதீஷ்குமார் மதிப்பீடு செய்து அனுப்பியதற்கு, ஆரம்பத்தில் தலா, 150 ரூபாய் பரிசுத்தொகையாக அனுப்பப்பட்டது.

அதிக வருவாய் ஈட்டியபோது, முதலீடு செலுத்தினால் மட்டுமே பரிசு

அதேபோல் நிறைய மதிப்பீடுகள் அனுப்பி அதிக வருவாய் ஈட்டியபோது ஒரு கட்டத்தில் இனி முதலீடு செலுத்தினால் மட்டும் பரிசுத்தொகை கிடைக்கும் என தகவல் வந்தது. அதை நம்பி அடுத்தடுத்து மொத்தமாக 5 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார்.

பரிசுத்தொகை வழங்குவது நிறுத்தம் - ஏமாற்றம்

ஆனால் பரிசுத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது. பலமுறை தொடர்பு கொண்டும், 'லிங்க்' செயல்படவில்லை. ஏமாந்துவிட்டதை அறிந்த சதீஷ்குமார் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை வாசிகள் 3 பேர் கைது

போலீசார் விசாரணைக்கு பின் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அபிலாஷ் 42, வித்யேஷ் 35, விபின் 22 ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்த 3 மொபைல், சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story