குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..! தாய்மைக்கான விருது..!

Pregnancy Quotes in Tamil
X

Pregnancy Quotes in Tamil

Pregnancy Quotes in Tamil-தெய்வம் பெற்றோருக்கு தந்த புதிய பூ, குழந்தை. அம்மா, அப்பா என்ற பட்டம் தந்த பல்கலைக்கழகம், குழந்தை.

Pregnancy Quotes in Tamil-குழந்தை என்பது உயிரினங்களுக்கு கிடைத்த வரம். எத்தனையோ பெண்கள் தனக்கு குழந்தை இல்லை என்று ஏங்கித் தவிப்பதையும் நாம் கண்டிருக்கிறோம். குழந்தைப்பருவம் என்பது மனிதர்களில் மட்டுமல்ல உயிரினங்களில் அனைத்துக் குழந்தைகளுமே அழகுதான். அது பன்றிக்குட்டியாக இருந்தாலும் சரி, யானைக்குட்டியாக இருந்தாலும் சரி.

  • ஆணினத்திற்கே கிடைக்காத ஒரு பாக்கியம். பெண்னினம் மட்டுமே பெற்று வரும் பரிசு..!
  • ஒரு கவளம் சோற்றைக் கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..உயிர் ஜனித்த சேதி கேட்டு கவளம் கவளமாக சோறுண்ணும்..குழந்தைக்கும் சேர்த்து..
  • ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..தாய்மையின் அதிசயம்..!
  • தொழில்நுட்ப வளர்ச்சிகளில் தாயின் கருவறையை விடப் பாதுகாப்பான அறையை குழந்தைக்கு எந்த விஞ்ஞானமும் தந்துவிட முடியாது.
  • இறைவனின் வல்லமைக்கு தாய்மையை விட சான்று ஒன்று வேண்டுமோ..?
  • பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது..ஏதோ ஒரு சுமைக்கு..ஆனால்
  • பத்து மாதம் சுமந்தாலும் கருவறை எனோ கனப்பதில்லை..
  • வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் ஆனால், பிரசவ வலியில் துடித்தாலும் உயிர் ஜனித்த பின்னே வலியெல்லாம் இன்பமாகும்...!
  • குழந்தையாய்...சிறுமியாய்...குமரியாய்...மனைவியாய் வளரும் உறவு தாய்மையில்தான் தன்னிறைவுப் பெறுகிறது..பெண்ணின் பிறப்பை பெருமைப்படுத்த..
  • கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியமாகிப்போனது..
  • தாய்மையின் மகத்துவத்தை எத்தனை தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் எல்லாவற்றையும் விட,,ஆமாம்...தாயின் மடியில்தான் சொர்க்கம் உறங்குகிறது..
  • என்னை சுமக்கும் தேவதை நீ...தாலிக் கொடியில் பிணைத்த என்னையும்...தொப்புள் கொடியில் பிணைத்த நம் உலகத்தையும்...
  • நாயகன் கைகோர்த்து நாளொரு தவமிருந்து நாட்கள் தள்ளி நல்லதொரு சேதி சொன்ன நாள் முதல் தொடங்கியது தாய்மையின் முதல் அத்தியாயம்..
  • மசக்கையின் மந்திரத்தில் மாற்றங்கள் எனக்குவர மன்னவன் தோள் சாய்ந்து மயக்கம் வருகுதென்றேன்,
  • தூயவளே துயர் வேண்டாம். நம் குழந்தை நீ சுமக்க என் குழந்தையாய் உன்னை நான் சுமக்கிறேன் துணிந்து வா என்னோடு என்றுரைத்தான்..
  • வாந்தியும் சோர்வும் வாட்டி வதக்கையிலே வசமிழந்து வந்து நின்றேன் என் தாயிடம். என் மகளே, மாதராய் பிறந்திட்டால் மணிமுத்தை பெற்றெடுக்க ஈரைந்து மாதங்கள் இவையனைத்தும் வருமென்று பக்குவமாய் எடுத்துரைத்தாள்..
  • பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போக பிடிக்காததெல்லாம் பிடித்துப்போக அவையனைத்தையும் சுவைத்து தீர்க்க முதல் மூன்று மாதமும் முறையாய் முடிந்தது..
  • பிறர் சொல்லிக் கேட்டறிந்தேன். காட்சியாக பார்த்திருந்தேன்.மனதார நானுணர்ந்து மகிழ்ந்து களைத்திருந்தேன் உன் அசைவில்..என் செல்லமே..
  • என் வயிறும் வளர்ந்திருக்க வாட்டமும் குறைந்திருக்கவசமாய் வளைந்து போனது இரண்டாம் மூன்று மாதங்களும்..
  • நீ வரும் நாளை நித்தமும் எதிர்நோக்கி நித்திரையும் நினைவாகிப் போனதே, உயிர் போகும் வலி என்றறிந்தும் உனக்காக எதிர் கொள்ள துணிந்தேன்,என் கண்மணியே ..
  • அம்மா அம்மா என்று பலமுறை நான் அலற..அழகாக நீ வந்தாய் என்னை அம்மா என்றழைக்க என் பூங்குயிலே..!
  • ஒற்றை மொழி பேசி, தத்தித் ததும்பி நடந்து, சிரிப்பால் அன்பைப் பொழிந்து, தாலாட்டில் தான் மயங்கி பிடிவாத குணம் கொண்டு, குரங்கு போல் குறும்பு செய்தாலும், மாதாவும் பிதாவும் தங்களின் உயிராய் நினைக்கும் மழலை..
  • தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும், உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்...
  • வராத வந்த வரம் நீ..எனக்கு கிடைத்திட்ட முத்து நீ..எனக்குள் உதித்த உயிர் நீ..கடவுளிடம் வேண்டினேன்..முத்தமாக இல்லை..இல்லை மொத்தமாக உன்னிடம் ஒரு வரம் பெற..ஆமாம்..தாய் என்ற வரம்..!
  • எத்தனைக் கோடி இன்பம் வந்தாலும் உன்னை ஈன்ற இன்பம் போல எனக்கு ஏதும் இன்பம் இல்லையடி..
  • எத்தனைக்கோடி பணம் இருப்பினும் எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை, நீ எனக்கு கிடைத்தபின்னே..நீயே என் பெரும் சொத்து..!
  • தாய்மையின் பட்டம் தந்த பல்கலைக்கழகம் நீ..நம் குடும்பத்தின் புதிய புத்தகம் நீ..வாழ்க்கையின் தத்துவம் கற்றுக்கொடுக்கும் புதிய ஆசானும் நீ..
  • உன் அப்பாவோ என்னை வென்றுவிட்ட மர்மப் புன்னகையை என் மீது வீசி..உன்னை ஜாடை காட்டுகிறார்..என் செல்லமே..
  • எதையோ இழந்தோம் என்று வாழ்ந்திருந்த நமக்கு, இன்று "எதையும் இழக்க தயார் உனக்காக" என்று உண்ர வைத்தது நம் குழந்தை..
  • கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மன சிறையில் அடைத்து விட்ட கள்ளி நீ..
  • கொஞ்சிக் கொஞ்சி நீ பேசுகையில், கொஞ்சம் குழம்பித்தான் போகிறது என் நெஞ்சம்.. உன் தத்தை மொழியில் தமிழின் அழகு கூடுதே..
  • உன் அர்த்தமில்லா சிறு புன்னகை கூட எனக்கு பெரிய படிப்பினைத்தருகிறது..என் வாழ்வின் முழு அர்த்தமும் நீயே..
  • அறிவாய் ஆறுதல் கூற முடியாத போதும், அழகால் கவலைகளை மறக்கச் செய்பவர்கள் தான் மழலைகள்..
  • மழலை மொழி போல மகிழ்ச்சி ஏதும் இல்லை, மருத்துவமும் ஏதும் இல்லை.. மட்டற்ற ஆசைகள் மட்டுமில்லாமல் மற்றதெல்லாம் கூட தோற்குமே.. மழலையின் புன்னகை மொழியாலே..
  • கருவுக்குள் சூல்கொண்ட மலரே..உன் வரவுக்கு காத்திருக்கும் என் விழியே..! பூத்திட்டாய் ஓருயிராய் என் வயிற்றுக்குள்.. இணைந்துவிட்டாய் புது உயிராய் தொப்புள் கயிறாய்..!
  • என் கரு கோவிலுக்குள் இருந்த கடவுள் நீ..கடவுளும் கருவறைக்குள்..குழந்தையும் கருவுக்குள்..
  • நீ கோபுரக் கலசம்..என் இதயக்கோவிலின் தெய்வம்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Similar Posts
Valathu Kan Thudithal Enna Palan
Mass Attitude Quotes in Tamil
பெண்களின் குங்குமம்  தற்போது என்ன ஆனது...?
சிலருக்கு தலையில் பலத்த அடிபட்டால் பழைய நினைவுகள் மறந்து போவது ஏன்?
செவிச் செல்வம் நிறைந்த காதுகளை பாதுகாப்பது எப்படி?
சிலர் தூக்கத்தில் உளறுவது ஏன்?
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு கண்புரை பாதிப்பு ஏற்பட காரணங்கள் என்ன?
குறட்டை விட்டு தூங்குவது ஆரோக்கியமானதா?
உங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை இருக்கிறதா? அப்போ இந்த விஷயங்களை தெரிஞ்சுக்குங்க..!
வாழைப்பழத் தோலை இனிமே தூக்கி எறியாதீங்க.. அதுல ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்குது...
நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? வாழ்க்கை சான்றிதழ் அளிக்க இது இறுதி மாதம்
எப்பவுமே யோசிச்சிக்கிட்டே இருக்கறீங்க? இந்த ஆபத்தான பழக்கத்தை உடனே மாத்துங்க!
இனிமே உணவுத்தட்டில் இருந்து ஒதுக்கி வைக்காதீங்க... கறிவேப்பிலை தரும் ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சுக்குங்க!