பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

Update: 2021-04-21 07:30 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்கினார்.

விருதுநகர் அருகே மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மாஸ்க் அணிந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் மாஸ்க் அணிந்து வந்து கபசுரகுடிநீரை வாங்கி பருகினர்.

Tags:    

Similar News