கொரோனா பெருந்தொற்றில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு பணி நியமன ஆணை
மரணமடைந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டது;
கொரோனா காலத்திவ் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை அளிக்கிறார், அமைச்சர் தங்கம்தென்னரசு
தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர காரணங்களால் மரணமடைந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கும் பொருட்டு, 3 பேருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, பணிநியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, ஆகியோர் கலந்து கொண்டனர்.