விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த முன்னாள் அமைச்சர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அதிமுக முன்னாள் அமைச்சர்.

Update: 2021-12-11 15:43 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகனம் மோதி சாலையில் அடிபட்டு கிடந்த இளைஞரை மீட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மருத்துவமனையில் சேர்த்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் அடிபட்டு கிடந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அதிமுக முன்னாள் அமைச்சர்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிவகாசி பிரதான சாலையில் அமைந்துள்ள நக்கமங்கலம் விளக்கு பகுதியில் கான்சாபுரத்தை சேர்ந்த சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு சுய நினைவு இல்லாமல் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

இந்நிலையில் அவ்வழியாக சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அடிபட்ட இளைஞரை மீட்டு தனது காரில் ஏற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த இடத்திற்க்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் முன்னாள் அமைச்சரே தனது காரில் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது அங்கிருந்தவர்களிடம் பாராட்டைப் பெற்றது.

Tags:    

Similar News