பைக்குகளை திருடி தான,தர்மம் செய்தவர் கைது

Update: 2021-04-17 05:00 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு பகுதிகளில் மோட்டார்பைக்குகளை திருடி தானம் தர்மம் செய்த திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு நாடார் பஜாரை சேர்ந்த குருநாதன் (50). இவர் தொடர்ந்து மோட்டார்பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 5 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திய போது வாகனங்களை திருடிய பிறகு அதை உடைத்து எடைக்கு போடுவதோ அல்லது விற்கவோ செய்யாமல் தனது உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் திருடிய வாகனங்களை தான தர்மமாக கொடுத்து வந்துள்ளார் என தெரியவந்தது. பின்னர் பைக் திருட்டில் ஈடுபட்ட குருநாதனை கைது செய்த போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News