சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி

மார்கழி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி.

Update: 2021-12-29 11:01 GMT

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் காேவில்.

மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி முதல் ஜனவரி 03 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக மலையேறும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி இல்லை எனவும் பக்தர்கள் மலையேற காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும், கோவிலில் இரவு தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News