மார்கழி மாதப்பிறப்பு - ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு - ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

Update: 2020-12-15 22:00 GMT

108 திவ்யதேசங்களில் ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். இங்கு அவதரித்த ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்களும் பாவை நோன்பிருந்து திருப்பாவை பாடி, கண்ணனுக்கு பாமாலை சூடி பரந்தாமன் கண்ணனையே மணந்தாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் சிறப்பாக உற்சவம் நடைபெறும்.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்களுடன் சிறப்பாக நெய்யப்பட்ட தங்க பட்டுப்புடவை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News