ஷாபியா ஷைபி படுகாெலை சம்பவம்: சாத்தூரில் மாதர் சங்கத்தினர் பாேராட்டம்

ஷாபியா ஷைபிபாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாதர் சங்கம் சாத்தூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் இணைந்து போராட்டம்.

Update: 2021-09-20 07:45 GMT

ஷாபியா ஷைபிபாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சாத்தூரில் மாதர் சங்கம் மற்றும்  முஸ்லிம் ஜமாத்தார்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

சாத்தூரில் ஷாபியா ஷைபி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாதர் சங்கம் சிறுபான்மை நலக்குழு ஜாமியா பள்ளிவாசல் சாத்தூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் இணைந்து நீதி கேட்டு போராட்டம் V.A. விஸ்வநாத் சிறுபான்மை நலகுழு வட்டாரத் தலைவர் தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் காதர் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.

ஆலிம்ஷா மாச கண்டன உரையாற்றினார். ராதாகிருஷ்ணன் பள்ளி தாளாளர் திருமிகு பாபு ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை கண்டன உரையாற்றினார் நிறைவு செய்து மாநிலச் செயலாளர் எஸ் லட்சுமி இன்றைய நிறைவுரை ஆற்றினார் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இப்போராட்டத்தில் மாதர் சங்க நகர செயலாளர் பரமேஸ்வரி ஒன்றிய செயலாளர் பாலம்மாள் நகர் குழு உறுப்பினர் ஜோதி .கருப்பாயி கலந்து கொண்டார்கள். நகர் குழு செயலாளர் விஜயகுமார் ஒன்றிய செயலாளர் சரோஜா கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News