பட்டாசு கடை உரிமம் பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

சாத்தூர் அருகே பட்டாசு கடை உரிமம் பெற வரைபடத்திற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது.

Update: 2022-02-08 13:25 GMT

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் கதிரேசன்.

சாத்தூர் அருகே பட்டாசு கடை உரிமம் பெற வரைபடத்திற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் (50). இவர் மேட்டமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டாசுக் கடைக்கு உரிமத்திற்கு கட்டிட வரைபட அனுமதி பெற ஊராட்சி செயலாளர் கதிரேசன் (52) என்பவரை அணுகி உள்ளார். இந்த நிலையில் பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதி பெற திருமலைராஜிடம் கதிரேசன் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதனையடுத்து திருமலைராஜ் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் பூசிய ரூ. 20,000 பணத்தை முன்பணமாக திருமலைராஜன் கதிரேசனிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கதிரேசனை கையும் களவுமாக பிடித்தனர். இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் பாரதிபிரியா உள்பட 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மேட்ட மலை ஊராட்சி மன்றத்தலைவர் பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் ராஜசேகர் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இரண்டு பேரின் வீடுகளில் செய்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பட்டாசு கடை கட்டிடத்திற்கு வரை பட அனுமதி பெற லஞ்சம் வாங்கிய கதிரேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News