சாத்தூர் பட்டாசு ஆலையில் தீ

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயில்பட்டி சேது ராமலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து

Update: 2021-07-02 16:30 GMT

தாயில்பட்டி சேது ராமலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயில்பட்டி சேது ராமலிங்கபுரத்தில் ராமமூர்த்தி என்பவர் பிரகாஷ் பட்டாசு ஆலையில் மாலை மின்னல் தாக்கியது. இதில் பட்டாசு ஆலையில் உள்ள சல்பர் அறையில் தீ விபத்து ஏற்பட்டு தீ பிடித்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்து அணைத்தனர். வேலை முடிந்து தொழிலாளர்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டதில் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News