சாத்தூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

சாத்தூர் அருேகே மின்னல் தாக்கி மாடு மேய்த்த விவசாயி மற்றும் ஒரு மாடு உயிரிழப்பு. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Update: 2021-11-23 15:23 GMT

சாத்தூர் அருேகே மின்னல் தாக்கி மாடு மேய்த்த விவசாயி உயிரிழப்பு.

சாத்தூர் அருேகே மின்னல் தாக்கி மாடு மேய்த்த விவசாயி மற்றும் ஒரு மாடு உயிரிழப்பு, இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், இருக்கன்குடி, வண்ணிமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் அரை மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் சாத்தூர் அருகே வண்ணிமடை கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(72). இவர் வன்னிமடை பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாலை வன்னிமடை காட்டு பகுதியில் வேலுச்சாமி மாடு மேய்த்து கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் பலத்த காயமைடைந்த நிலையில் வேலுச்சாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மேலும் அவர் மேய்த்து வந்த மாடுகளில் ஒரு மாடும் உயிரிழந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இருக்கன்குடி போலீஸார் வேலுச்சாமியின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைகாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News