தந்தையை கைவிட்ட பிள்ளைகள்: ஆற்றில் குதித்து தற்காெலைக்கு முயன்ற முதியவர்

சாத்தூரில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு.

Update: 2021-12-07 08:21 GMT

சாத்தூர் வைப்பாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அருணாசலத்தை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெற்ற பிள்ளைகள் கவனிக்க மறுத்ததால் ஆற்று வெள்ளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் வயது 75. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்கு மகன்களும் திருமணமாகி அதே ஊரில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மகன்கள் நாலுபேரும் தன்னை கவனிக்க மறுத்ததால் விரக்தியடைந்த அருணாச்சலம் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பிய செல்லம் சாத்தூர் வைப்பாற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

ஏற்கனவே ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் அடித்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் முட்செடிகள் சிக்கியுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைவாக ஆற்றில் இறங்கி கயிறு கட்டி அடியில் சிக்கியிருந்த முதியவரை பத்திரமாக உயிருடன் மீட்டு அவரை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News