நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ராஜபாளையத்தில் அதிமுகவின் விருப்ப மனு அளிப்பு

ராஜபாளையம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-11-27 09:42 GMT

ராஜபாளையம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜபாளையம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகேசன் நகர அவைத்தலைவர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் 27,28, 29 ஆகிய மூன்று நாள் வேட்பாளர்கள் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று முதல் நாள் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், இராஜபாளையம் பகுதியில் உள்ள 42 வார்டுகளுக்கும் விருப்ப மனு அளிக்க ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News