இராஜபாளையத்தில் திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது: போலீசார் அதிரடி

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் தெரு பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைக்காமல் 17 பவுன் நகை திருட்டு வழக்கில் குற்றவாளி கைது. வடக்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை .

Update: 2021-12-03 11:44 GMT

ராஜபாளையத்தில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் தெரு பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைக்காமல் 17 பவுன் நகை திருட்டு வழக்கில் குற்றவாளி கைது. வடக்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டால் (இனிப்பு கடை) நடத்தி வருபவர் வளர்மதி வயது 48, மனைவி பஞ்சவர்ணம். இவருக்கு 3 குழந்தைகள். இவர் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் தெரு பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 28ம் தேதி பாண்டிச்சேரி கரைக்கால் உள்ள முதல் மகள் வீட்டிற்கு சென்று திரும்பி வந்து வீட்டில் பார்த்த போது வீட்டின் பூட்டு பூட்டியது போல் அப்படியே இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறத்து லாக்கரை உடைத்து பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த வளர்மதி இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகரின் பெயரில் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த திருவள்ளூர் தெருவை சேர்ந்த காமராஜ் (வயது 46) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது, 17 பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இவர் வளர்மதி நடத்திய ஸ்வீட் ஸ்டாலில் டீ மாஸ்டராக வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளி காமராஜ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News